ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மருந்து வணிகர்கள் இன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டை பொறுத்தவரை, 35 ஆயிரம் மருந்து கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது. நேற்று நள்ளிரவு 12 மணி தொடங்கி உள்ள இந்த போராட்டம் இன்று 12 மணி வரை நீடிக்கும். அதேநேரம், தமிழக அரசின் மருந்தகங்கள் வழக்கம் போல் செயல்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.


ஆன்லைன் மருந்து விற்பனைக்கு அனுமதி அளிப்பது என மத்திய அரசு சமீபத்தில் வரைவறிக்கை ஒன்டைற வெளியிட்டது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.