பால் கலப்படம் செய்யும் நிறுவனங்கள் மீது மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் தனியார் நிறுவன பாலில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடந்த ஆண்டு குற்றம் சாட்டியிருந்தார். இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். 


இந்த வழக்கில், பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படம் செய்யப்பட்டது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்ததது. அதில், 


அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் 2 மாதத்திற்கு ஒரு முறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கண்காணித்து பால் கலப்படம் குறித்து ஆய்வு அறிக்கையை  உணவு பாதுகாப்புத்துறை ஆணையருக்கு அளிக்க வேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் மீது டிஐஜி குற்ற நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.