ஆரோக்யா பாலை தொடர்ந்து மேலும் 3 தனியார் நிறுவனங்கள் பாலுக்கான விற்பனை விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 1ம் தேதி முதல் தமிழகத்தில் முன்னணி தனியார் பால் நிறுவனமான ஹட்சன் நிறுவனம் நிலைபடுத்தப்பட்ட மற்றும் கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பாலுக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியது.


இதனைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்பட்டு வரும் தனியார் பால் நிறுவனங்களும் தங்களின் பாலுக்கான விற்பனை விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளன. அதன்படி, “வி.கே.ஏ. பால்” நிறுவனம் “ஆசை பால்” நிறுவனம், “அமிர்தா பால்” நிறுவனம் ஆகியவையும் தங்கள் நிறுவனத்தின் நிலைபடுத்தப்பட்ட மற்றும் கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பாலுக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.


இந்த பால் விலை உயர்வை வி.கே.ஏ. பால் நிறுவனம் நாளை முதலும், அமிர்தா பால் நிறுவனம் வரும் 6-ம் தேதியும், ஆசை பால் நிறுவனம் வரும் 7-ம் தேதியும் அமல்படுத்துகிறது.