தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்துகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த முறையின் சோதனையில் அமைச்சருக்குச் சொந்தமாக புதுக்கோட்டை மாவட்டம், இழுப்பூரில் உள்ள வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.


கடந்த ஏப்ரல் மாதம் 7-ம் தேதி விஜயபாஸ்கர் மற்றும் கூட்டாளிகள் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சிக்கிய நகைகள், ஆவணங்களை ஆகியவற்றின் அடிப்படையில் தற்போது இழுப்பூரில் சோதனை நடத்தப்படுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.