மொழியை தாயை விட மேலாகவும் போற்றி வாழ்பவர்கள் நாம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது.,


‘வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்றும் ‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு’ என்றும் சொல்லி வளர்ந்த இனம் தமிழினம்!


மொழியை நம் தாயாகவும் தாயைவிட மேலாகவும் போற்றி வளர்ந்தவர்கள், வாழ்பவர்கள் நாம்!


தாய்மொழியே நம் உணர்ச்சி! எழுச்சி! வளர்ச்சி! மொழிப்பாதுகாப்பே இனப் பாதுகாப்பு! என்ற எண்ணத்துடன் தாய்மொழியைப் போற்றுவோம்!


அனைவர்க்கும் உலகத் தாய்மொழிதின வாழ்த்துகள்! நம் தாய்மொழியாம் தமிழ் வாழ்க!



இவ்வாறு பதிவிட்டுள்ளார்.