சேலத்தில் மத்திய அமைச்சர் பொன்னார் மீது காலணி வீசியதால் பரபரபப்பு ஏற்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறையில் பிஎச்டி படித்து வந்த ஜே.என்.யூ. மாணவர் முத்துக்கிருஷ்ணன் மர்மமான முறையில் உயிரிழந்தார். 


அவரது உடல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு, பிறகு ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் அரிசிபாளையத்திற்கு கொண்டு வரப்பட்டது.


இந்நிலையில் அவரது உடலுக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 


ஜே.என்.யூ. மாணவர் முத்துக்கிருஷ்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீசப்பட்டது. மத்திய அமைச்சர் பொன்னார் மீது காலணி வீசியதால் அங்கு பரபரபப்பு ஏற்பட்டது. மேலும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். அவர் மீது காலனி வீசினர். காலணி வீசியவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.