நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் சுற்றுப் பயணத்திற்கு 'நாளை நமதே' என பெயரிட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் சுற்றுப் பயணத்தை பிப்ரவரி 21 முதல் துவங்க உள்ளார். இந்த சுற்றுப் பயணமானது ராமநாதபுரத்தில் இருந்து துவங்க உள்ளது. தற்போது தனது அரசியல் பயணத்திற்கு நாளை நமதே என பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.


மேலும், தமிழகத்தை நாளை தமிழர்களுடையதாக, மனிதர்கள் வாழக்கூடிய பிரதேசமாக மாற்றுவதே 'நாளை நமதே. அரசியல் பயணத்தின் முதல்கட்டமாக சில கிராமங்களை தத்தெடுக்க உள்ளோம். கிராமங்களை தத்தெடுக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் ஹார்வர்டு பல்கலை.,யில் கிராமங்களை தத்தெடுப்பது குறித்து பேச உள்ளேன். கிராமங்களுக்கு உதவும் எண்ணம் அரசியல்வாதிகளிடம் குறைந்து விட்டது. இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.