ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் இன்று டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக முன்னால் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.
தமிழக அரசு தரப்பில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க எந்தவித முடிவும் எடுக்கவில்லை. எனவே ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை அல்லது நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் ஜனாதிபதியை சந்திக்க முடிவு செய்தனர்.


அதன்படி குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரணாப் முகர்ஜியை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்பிக்கள் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு  உத்தரவிடக்கோரி கோரிக்கை வைத்துள்ளனர்.