நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை இரண்டாவது கட்டமாக இன்று முதல் சந்தித்து வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சந்திப்பில் ரஜினிகாந்த் பேசும்போது, எனது அரசியல் விருப்பம் பற்றி மக்களை விட ஊடகங்கள் அதிக ஆர்வத்தில் இருக்கின்றனர். எனது பிறந்த நாளின்போது நான் தனியாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அதனால் தான் ரசிகர்களை சந்திக்கவில்லை. 


எனது அரசியல் விருப்பம் பற்றி வரும் 31-ம் தேதி அறிவிப்பேன். அரசியலுக்கு வருவேன் என்று கூறவில்லை; எனது விருப்பம் குறித்து தான் 31-ல் அறிவிப்பேன் என்கிறேன். 


அரசியல் எனக்கு புதிது அல்ல; அரசியல் பற்றி தெரிந்ததால்தான் வர தயங்குகிறேன். போர் வரும்போது பார்க்கலாம் என்றேன்; போர் என்றால் தேர்தல்தானா? என்று கூறினார்.