சென்னை தியாகராயநகரில் தீ விபத்திற்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை தி.நகர் உஸ்மான் சாலையிலுள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 7 மாடி கட்டடங்கள் கடும் சேதம் அடைந்ததோடு, கோடிக்கணக்கான மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசமானது.


தொடர்ந்து கட்டடம் வலுவிழந்ததால், அதை இடிக்கும் பணி நடைபெற்று வந்தது. இதற்காக, 'ஜா கட்டர்' இயந்திரமும் பயன்படுத்தப்பட்டு வந்தது.


இந்நிலையில் இன்று சென்னை தி.நகர் தீ விபத்திற்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் பாதி பகுதி இடிந்து விழுந்தது. கட்டட இடிப்பு பணி ஒரு வாரத்திற்கு பின் இன்று மீண்டும் தொடங்கியது. 2 நாளில் முழுமையாக இடிக்கப்படும் என ஒப்பந்ததாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.