MBBS உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.13 லட்சம் மட்டுமே கட்டணமாக வசூலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் மருத்துவப்படிப்புகளுக்கு அதிக கட்டணம் வசூளிக்கப்படுவதாகவும், எனவே இதற்கான கட்டங்களை நிர்ணயிக்கவேண்டும் என்ற வகையில் நிகர்நிலை பல்கலைகழகங்களில் இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜவஹர் சண்முகம் என்பவர் மனுத்தாக்கல் செய்தார்.


இந்த மனுவில், ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய்க்கு மேல் இளங்கலை மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களிடம் வசூலிப்பதாக அவர் குறிப்பிட்டுருந்தார். இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.


இந்நிலையில், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டி முன்னதாகவே குழு அமைக்கப் பட்டிருப்பதாக தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார். இந்தக் குழு விரைவில் கட்டண நிர்ணயத்தை முடிவு செய்து அறிவிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.


மேலும், தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் MBBS படிப்பிற்கு ஆண்டுக்கு அதிக பட்சமாக ரூ.13 லட்சம் மட்டுமே வசூலிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்!