நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் மணிமண்டபத்தினை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அவர்களுக்கு சென்னை அடையாறு பகுதியில் தமிழக அரசு ரூ.2.80 கோடி செலவில் மணிமண்டபம் கட்டியுள்ளது. இந்த மணிமண்டபத்தினை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


முன்னதாக வரும் அக்டோபர் 1 ஆம் தேதி மணிமண்டபத்தினை அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டது.


இதனையடுத்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் குடும்பத்தார், மணிமண்டபத்தினை முதல்வர் திறந்து வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். நடிகர் சங்கம் தரப்பிலும் இதுதொடர்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டது.


இந்நிலையில் தற்போது இதுகுறித்து தமிழக அரசு தெரிவித்துள்ளதாவது:-


 



 


திட்டமிட்டப்படி அக்டோபர் 1 ஆம் தேதி நிகழ்ச்சி நடைபெறும். மணிமண்டபத்தை பன்னீர்செல்வம் திறந்து வைப்பார், கடம்பூர் ராஜூ முன்னிலை வகிப்பார். என தெரிவிக்கப்பட்டுள்ளது.