அதிமுக புரட்சிதலைவி அம்மா அணி ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை சென்னை திரும்புகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிமுக-வின் இரு அணிகளும் ஒன்று கூடுவது குறித்து இதுவரை பேச்சு வார்த்தை நடக்கவில்லை. இதற்கு எங்கள் தரப்பில் எந்த நிபந்தனையும் இல்லை என அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.


இந்நிலையில், நேற்று இரவு அமைச்சர் தங்கமணி வீட்டில் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். 


இந்த பரபரப்பான அரசியல் சூழலில் தேனி சென்றிருந்த ஓ.பன்னீர்செல்வம், இன்று மாலை சென்னை திரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பல முக்கிய முடிவுகள் இன்று எடுக்கப்படலாம் என தெரிகிறது.