தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் ஆணையராக பெரோஸ்கான் செயல்பட்டு வந்தார். தற்போது அவர் ஓய்வு பெற்றதால், அவருக்கு பதிலாக புதிய ஆணையர் நியமிக்கப்படுவார் எனக் கூறப்பட்டு இருந்தது. இந்தநிலையில், இன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையராக இரா.பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டார்.


2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையராக பெரோஸ்கான் செயல்பட்டு வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளா அந்த பதவியில் இருந்து வந்த பெரோஸ்கானுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.