திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம், மார்க்கம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நேற்றிரவு பொதுமக்கள் பேருந்துக்காக காத்துகொண்டு இருந்த  நிலையில், குப்பை தொட்டியில் அழுகை குரல் கேட்டதை அடுத்து அதில் இருந்த பச்சிளம் பெண் சிசு மீட்கப்பட்ட நிலையில், இன்று திருச்சியில் இதே  போன்ற சம்பவம் நடந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருச்சி முசிறி நெடுஞ்சாலையில் திருப்பராய்த்துறை அருகே உள்ள ராமகிருஷ்ணா ராமகிருஷ்ணா குடில் பகுதியில் நேற்று இரவு பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையை சாலை ஓரத்தில வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியத்து.


அவ்வழியே சென்ற பொதுமக்கள் குழந்தையின் அழுகுரல் கேட்டு அருகில் சென்று பார்த்தபோது பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து உடனடியாக பெட்டவாய்த்தலை காவல் நிலைய போலீசாருக்கு பொது மக்கள் தகவல் அளித்தனர்.


இதனை அடுத்து குடில் பகுதிக்கு விரைந்த  பெட்டவாய்த்தலை காவல்துறையினர் குழந்தையை
பத்திரமாக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


ALSO READ | திண்டுக்கல்லில் குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் பெண் சிசு..!!


தற்போது திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது. குழந்தையைப் பெற்றெடுக்கும் பெற்றோர் குழந்தையை வளர்க்க விருப்பம் இல்லை என்றால் அதனை பாதுகாப்பாக அரசு சார்பில் ஏற்பாடு செய்திருக்கும் குழந்தைகள் மையம் அல்லது குழந்தைகள் காப்பகங்களில் வழங்கலாம் என்று தொடர்ந்து  விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், இது போன்று முட்டாள்தனமாக சிலரின் செயல்பாடு மிகவும் வருத்தமளிக்க கூடியதாக உள்ளது.



ALSO READ | திருப்பூர் அருகே தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR