திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் மறைவுக்கு மத்திய அமைச்சர் பொன் ராதாரகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் (69) மாரடைப்பால் காலமானார். மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் உள்ள ஜீவா நகர் என்ற பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த எம்.எல்.ஏ ஏ.கே.போஸிற்கு நள்ளிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரை அவரது குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 


தற்போது பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஏ.கே.போஸ் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மதியம் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளார். 


இந்நிலையில் ஏ.கே.போஸ் மறைவுக்கு மத்திய அமைச்சர் பொன் ராதாரகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,


திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் திரு போஸ் அவர்களின் மறைவு மிகுந்த மனவேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. அவரது பிரிவால்வாடும் குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா நற்கதியடைய  அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன்


 



 


இவ்வாறு பதிவிட்டுள்ளார்.