மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களில் போயஸ் கார்டன் இல்லத்தில் நேற்று திடீரென வருமான வரிதுறை சோதனை நடத்தினர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வருமான வரித்துறையின் கூடுதல் இயக்குனர் தலைமையிலான 10-க்கு மேற்பட்ட அதிகாரிகள் கொண்ட குழு, சுமார் 4 மணிநேரத்திற்கும் மேலாக  சோதனையில் நடத்தினர். 


பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சோதனைக்க காரணம் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தான் என டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். 


இந்நிலையில் இச்சோதனை குறித்து ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளரான எம்.பி மைத்ரேயன் "காரணம் என்னவாக இருந்தாலும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் சோதனை என்பது மிகுந்த மன வேதனை அளிக்கிறது. என்னைப் பொறுத்த வரையில் அம்மாவின் இல்லம் ஒரு கோயில்” என தெரிவித்துள்ளார்.