தேமுதிக கட்சியின் பொருளாளராக விஜயகாந்த் அவர்களின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில் இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டது.



இதுகுறித்து இன்று தேமுதிக கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பிட் தெரிவித்துள்ளதாவது...


"இன்று (19.10.2018) தேமுதிக தலைமை கழகத்தில், நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தலைமையில், தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட கழக செயலாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அவைத்தலைவராக திரு.டாக்டர்.வி.இளங்கோவன் அவர்கள், கழக பொருளாளராக திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள், கழக கொள்கைப்பரப்பு செயலாளராக திரு.அழகாபுரம்.ஆர்.மோகன்ராஜ் அவர்கள் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்கள்." என குறிப்பிடப்பட்டுள்ளது!