நாமக்கல்லில் பரமத்தி சாலையில் உள்ள இ.பி.காலனியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு சிவானி, கனிகா என்ற 2 மகள்கள் உள்ளனர். நாமக்கல் கிரீன்பார்க் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவி கனிகா நடந்து முடிந்த தேர்வில் 500-க்கு 490 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


ALSO READ | சமூக வலைதளங்களில் நாட்டின் நலனுக்கு எதிரான கருத்துகளை பரப்ப வேண்டாம்: மோடி


இந்த நிலையில் நேற்று வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, லாரி டிரைவர் நடராஜனின் மகள் கனிகாவுக்கு பாராட்டு தெரிவித்தார். 


உரையாடலின் தொகுப்பு:


பிரதமர்: கனிகா ஜி வணக்கம்... எப்படி இருக்கிறீர்கள்?


கனிகா : வணக்கம் சார்... நன்றாக இருக்கிறேன்.


பிரதமர்: தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, வெற்றி பெற்றதற்கு முதலில் பாராட்டுகளை தெரிவிக்கிறேன்.


கனிகா:- நன்றி சார். 


மோடி:- நாமக்கல் பெயரை கேட்டவுடன், எனக்கு ஆஞ்சநேயர் கோவில்தான் நினைவுக்கு வரும். இனிமேல், உங்களுடன் பேசியதும் நினைவுக்கு வரும். உங்கள் குடும்பத்தினர், ஆசிரியர் மனநிலை எப்படி இருந்தது?


கனிகா:- மிகவும் சந்தோஷப்பட்டனர். பெருமைப்பட்டனர்.


மோடி:- உங்கள் எதிர்கால திட்டம்?


கனிகா:- டாக்டராக விரும்புகிறேன், சார்.


மோடி:- உங்கள் பெற்றோரும் மருத்துவ துறையில் இருக்கிறார்களா?


 


ALSO READ | நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும்: மாநிலங்களவை எம்பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை


கனிகா:- இல்லை சார். அப்பா, ஒரு டிரைவர். என் அக்காள்தான் எம்.பி.பி.எஸ். படித்துக் கொண்டிருக்கிறார்.


மோடி:- உங்கள் அப்பா நல்ல காரியம் செய்திருக்கிறார். அவர் எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறார். உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.