வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பருவமழை வெளுத்து வாங்கிவருகிறது. இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில்.....!


வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாகவும், வெப்ப சலனம் காரணமாகவும் அடுத்த வரும் இரு தினங்களில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய கூடும் என்றும், சென்னையை பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.