சென்னை: இந்த ஆண்டிற்கான வடகிழக்குப் பருவ மழை இன்னும் 2 நாட்களில் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்நிலையில் வரும் 30-ம் தேதி வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 


தற்போது மத்திய கிழக்கு வங்கக் கடலில் கியான்ட் புயல் நிலை கொண்டுள்ளது. மேலும் வங்கக் கடலின் மேற்கு திசையை நோக்கி அது நகர்ந்து வருவதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.  இதனால் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.