சென்னை: கடந்த டிசம்பர் 5-ம் தேதி தமிழகத்தின் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்தார். இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 3 மாதமாக காலியாக இருந்த இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியின் தேர்தல் முடிவுதான் பல கட்சிகளின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதாக அமையும். எனவே இந்த தொகுதியை கைப்பற்றுவதில் அனைத்து கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவும்


அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு மற்றும் எதிர்பார்ப்புடன் பேசப்பட்டு வரும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 


தேமுதிகவின் வட சென்னை மாவட்ட செயலாளர் மதிவாணன் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவார் என்றும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.