ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக வெற்றிப்பெற்ற டிடிவி தினகரன், இன்று பேரவை தலைவர் அறையில் எம்.எல்.ஏ-வாக பதவியேற்றார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சபாநாயகர் தனபால் அவருக்கு பதவி பிரமானம் செய்து வைத்தார்.


நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் கடந்த டிச.,24 அன்று வெளியானது!


கடந்த டிச., 21 ஆம் நாள் நடைப்பெற்ற இந்த இடைத்தேர்தலில் 1,76,885 வாக்குகள் பதிவாகின. டிச.,24 அன்று காலை 8.00 மணியளவில் இந்த வாக்குகளின் எண்ணிக்கை துவங்கியது. ஆரம்பம் முதலே சுயேட்சை வேட்பாளர் தினகரன் முன்னிலை வகித்து வந்தார். இறுதியாக 40707 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் அமோக வெற்றிப்பெற்றார்.


இந்த வெற்றிக்குப் பின் அவர் இன்று(டிச., 29) பேரவை தலைவர் அறையில் எம்.எல்.ஏ-வாக பதவியேற்றார்!