ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு, டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. 


இந்த இடைத்தேர்தலில் திமுக அணி சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படும். 


இந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படும். மனுத்தாக்கல் செய்ய டிசம்பர் 4-ம் தேதி கடைசிநாள். மனுத்தாக்கல் செய்ய வருவோர், கார்களில் அணிவகுத்து வரக்கூடாது. 5 பேர் மட்டுமே தேர்தல் நடத்தும் அதிகாரி அறைக்குள் வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.