சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் தேர்தல் அதிகாரியாக வேலுச்சாமி செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் வேலுச்சாமி மாற்றப்பட்டு பிரவீன் நாயர் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் அதிகாரியை மாற்றக்கோரி தி.மு.க உள்பட ஏராளமான கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். 


இதையடுத்து, ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருந்த வேலுச்சாமி மாற்றப்பட்டு பிரவீன் நாயர் நியமித்தனர். இதனை தொடர்ந்து நேற்று தண்டாயர் பேட்டையில் உள்ள தேர்தல் அலுவலகத்திற்கு வந்து முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.