முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் நகை, பணம் போன்றவை கொள்ளை! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வருகிறார். அவர் தனது குடும்பத்துடன் வெளியூர் சென்று வீடு திரும்பிய போது வீட்டில் வைத்திருந்த நகை, பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. 


வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் ரூ.1,10 லட்சம் ரொக்கம், வைரம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.