கேரளா வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு ரூ.1 கோடி நிதி -ஸ்டாலின்
கேரளாவில் வெள்ள பாதிப்புக்கு திமுக அறக்கட்டளை சார்பில் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதியுதவி!
கேரளாவில் வெள்ள பாதிப்புக்கு திமுக அறக்கட்டளை சார்பில் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதியுதவி!
கேரளாவில் கடந்த ஆகஸ்ட் 8 முதல் தென்மேற்கு பருவமழை வரலாறு காந்தா அளவுக்கு பெய்து வருகிறது. இதனால், வடக்கு மற்றும் கிழக்கு கேரளா பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு இதுவரை 38 பேர் பலியாகியுள்ளனர். வெள்ளப் பாதிப்பு பகுதிகளில் இருந்து இதுவரை 439 நிவாரண முகாம்களில் 53,501 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
வெள்ள அபாயம் மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள இராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை மற்றும் என்.டி.ஆர்.எஃப் ஆகியவை ஈடுபட்டுள்ளன என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடுக்கி, வயநாடு, எர்ணாகுளம் உட்பட பகுதிகளில் பார்வையிட்டு மீட்பு பணிகளை குறித்து ஆராய்ந்து வருகிறார்.
கேரளா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, திரைபியாரபலங்கள் ஆகியோர் நிவாரண உதவி தொகை வழங்கிவருகின்றனர். இந்நிலையில், தி.மு.க அறக்கட்டளை சார்பில், நிவாரண நிதியாக ரூ.1 கோடி வழங்கினார் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழ்ந்தவர்களின் குடும்பத்திற்கு தனது இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.