சென்னை: எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாள் முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரின் சிலைக்கு, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்த நாள் விழா இன்று தொடங்கியுள்ளது. இதையடுத்து சென்னை, ராயப்பேட்டையிலுள்ள, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த அக்கட்சி பொதுச்செயலாளர் சசிகலா அங்குள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


இதையடுத்து, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு சிறப்பு மலரை சசிகலா வெளியிட்டார். கட்சி அவைத் தலைவர் மதுசூதனன் அதை பெற்றுக்கொண்டார். எம்.ஜிஆர்  தபால் தலையை முதல்-அமைச்சர் பன்னீர் செலவம்  பொதுசெயலாளர் சசிகலா பெற்று கொண்டார்.