கிருஷ்ணகிரி அசோக் குமார், நாமக்கல் பி.ஆர்.சுந்தரம் ஆகியோர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்பொழுது நாமக்கல் எம்.பி., பி.ஆர்., சுந்தரம் பேசியதாவது:-


நான் மனதில் என்ன நினைத்தேனோ அதனை முதல்வர் கூறினார். அதிமுகவை வழிநடத்தும் திறமை பன்னீருக்கே உள்ளது. தம்பிதுரை தவிர அனைத்து எம்.பி.,க்களும் பன்னீருக்கே ஆதரவு தருவார்கள். மருத்துவமனையில் ஜெயலலிதாவை எங்களால் சந்திக்க முடியவில்லை. ஜெயலலிதா இறந்த போது சசிகலா கண்ணீல் கண்ணீர் கூட வரவில்லை. நாங்கள் அழுதபோது தம்பிதுரை சீப்பு எடுத்து தலை சீவினார். ஜெயலலிதா உடல் வைக்கப்பட்ட போது யாரும் அழுகவில்லை. ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் விலக வேண்டும். 


குடும்ப அரசியல் நடத்தவோம் என நடராஜன் கூறுகிறார். அவருக்கு என்ன யோக்கியதை உள்ளது. சசிகலா - நடராஜன் திருமணம், யார் தலைமையில் நடந்தது. நீங்கள் துரோகியா அல்லது பன்னீர் துரோகியா? ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பூட்ஸ் காலுடன் தீபக் நின்றார். ஜெயலலிதா மர்ம மரணம் பற்றி சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும். ஜெயலலிதா வீடு நினைவு சின்னமாக்க வேண்டும் என அவர் பேசினார்.