சசிகலா எச்சரிக்கையால் ஆளுநர் மாளிகையில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதால் சசிகலா இன்று கூவத்தூரில்தங்க வைக்ககப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ.,க்களுடன் அவர் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பின்னர் அவர் கவர்னர் மாளிகை முன்பு எம்.எல்.ஏ.,க்களுடன் வரவுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


போயஸ் கார்டன் இல்லத்தில் அதிமுக தொண்டர்களிடம் பேசிய சசிகலா “ஓரளவுக்குத் தான் பொறுமையைக் கையாள முடியும். அதற்கு மேல் தாங்கள் செய்ய வேண்டியதைச் செய்வோம்.” என எச்சரிக்கை விடும் தொனியில் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.