தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்ட வாக்காளர் சரிபார்ப்பு பணி இன்று நடைப்பெறுகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 1-ஆம் நாள் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த வாக்காளர் பெயர் பட்டியலின் படி தமிழகத்தில் 5 கோடியே 82 லட்சத்து 89 ஆயிரத்து 379 வாக்காளர்கள் உள்ளனர். 


வாக்காளர் பட்டியலில் வாங்களார் தங்களது பெயர் விவரங்கள் சரியாக உள்ளது என திருத்திக்கொள்ள சிறப்பு முகாம்கள் தேர்தல் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் 9-ஆம் நாள் முதற்கட்ட வாக்காளர் சரிபார்ப்பு பணி 67,644 ஓட்டுச்சாவடிகளில் நடத்தப்பட்டது.


இந்நிலையில் இன்று இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது. இதன்படி தமிழகம் முழுவதும் 67,674 வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


இந்த சிறப்பு முகாம்களில் வாக்காளர்கள் தங்களது பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது!