சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் உடல்நலக்குறைவால் காலமானார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் சரவண பவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால். உடல் நிலை மோசமாக இருந்ததால் கோர்ட்டு உத்தரவின்படி சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சரவணபவன் ஹோட்டலின்  உரிமையாளர் ராஜ கோபால் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். 


கொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்றுள்ள ராஜ கோபால் உடல்நலக்குறைவு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு போதிய வசதிகள் இல்லாததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று ராஜகோபாலின் மகன் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், ராஜ கோபால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 


இதையடுத்து, அவர் சிறைக்கு செல்வதற்கு முன்பாக சிகிச்சை பெற்ற வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்த போதிலும், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.