Senthil Balaji Habeas Corpus Case: சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால், அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்றிரவு கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் நேற்று அதிகாலை தொடங்கிய அமலாக்கத்துறை சோதனை சுமார் 17 மணிநேரமாக நடைபெற்றது. தொடர்ந்து, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆட்கொணர்வு மனு தாக்கல் 


அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், இதயத்தில் மூன்று இரத்த நாளங்களில் அடைப்புகள் உள்ளது மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அவருக்கு இதய அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


மேலும், தனது கணவரை அமலாக்கத்துறையினர் சட்டவிரோத காவலில் வைத்துள்ளதாகவும், அவரை விடுவிக்க உத்தரவிட வேண்டும் எனவும் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை இன்று தாக்கல் செய்தார்.


மேலும் படிக்க | 'செந்தில் பாலாஜி ரூ 30 ஆயிரம் கோடி பற்றி சொல்லிடுவாரோ என ஸ்டாலினுக்கு பயம்' - இபிஎஸ்


அவசர வழக்கு


இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் திமுக எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுந்தர் மற்றும் சக்திவேல் அமர்வில் முறையிட்டார். அப்போது பேசிய அவர்,"நேற்று காலை 7 மணி முதல் அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்த நிலையில், சட்டவிரோதமாக காவலில் வைத்திருக்கின்றனர்.


கைது செய்த போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. கைது குறித்து குடும்பத்தினருக்கு தகவல்  தெரிவிக்கப்படவில்லை. இந்த வழக்கை அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுக்க வேண்டும்" என கூறியிருந்தார். இந்த முறையீட்டை கேட்ட நீதிபதிகள், மனுவுக்கு எண்ணிடப்பட்ட விஷயத்தை,  நீதிமன்றத்தில் தெரிவித்தால், வழக்கு பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்திருந்தனர். 


வேறு அமர்வுக்கு மாற்றம் 


இந்நிலையில், இவ்வழக்கை விசாரிக்க இருந்த நீதிபதிகளுள் ஒருவரான சக்திவேல் வழக்கில் இருந்து தாமாக முன்வந்து விலகியுள்ளார். இது தொடர்பாக, நீதிபதி சக்திவேல் எவ்வித விளக்கமும் தெரிவிக்கவில்லை என தெரிகிறது. அவரும் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூர் மாவட்டடத்தை சேர்ந்தவர் என்பதால், இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. அவர் கரூர் மாவட்டத்தின் வாங்கல் பகுதியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. 


இதன்மீது உரிய நீதிமன்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வேறு அமர்வுக்கு மாற்றப்படும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, மனுதாரர் வழக்கறிஞரிடம் தெரிவித்துள்ளார். நீதிபதி சக்திவேல் விலகிய நிலையில் நீதிமன்ற நடைமுறையின்படி, இந்த வழக்கு நீதிபதிகள் ஜே. நிஷா பானு மற்றும் டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கின் விசாரணை இன்று மாலைக்குள் தொடங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  


மேலும் படிக்க | அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படும் செந்தில் பாலாஜி..? அவர் பதவிக்கு வரும் அடுத்த அமைச்சர் இவரா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ