சென்னை மாதவரம் அடுத்த புழல் புத்தகரம் காமராஜர் நகர் சேர்ந்தவர் சீனிவாசன், இவருடைய மகன் கார்த்திக் (11) அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான்.   சீனிவாசனுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.  நேற்று இரவு 7 மணி அளவில் சீனிவாசனின் இளைய மகன் கார்த்திக் படுக்கையில், அண்ணன் தம்பி இருவரும் தூக்கு போடுவது எப்படி என்பது பற்றி நடிப்பிற்காக படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு பார்த்துள்ளனர்.  இந்நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சிலை கடத்தல் வழக்கு... ஆஜராகவில்லை என்றால் தள்ளுபடி செய்யப்படும் - உயர் நீதிமன்றம் உத்தரவு


இதனை அடுத்து வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த அண்ணன் தன் வீட்டின் அருகே வேலை செய்திருந்தவரிடம் அழைத்துக் கூறியுள்ளான், இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பின்பு தகவலின் பேரில் விரைந்து வந்த புழல் காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அதன் பின்பு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.



பின்பு கார்த்திக்கின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது, அங்கு விரைந்து வந்த கார்த்தியின் தாய் கதறி அழுவது பார்ப்போர் கண்களை கலங்க வைத்தது.  மேலும் புழல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



மேலும் படிக்க | தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சி அதிகரிக்கும்: ஜே.பி நட்டா 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ