திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து பெருமாநல்லூரில் உள்ள எஸ்.எஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (60). இவர் தனது மனைவி வசந்தா (55) என்பவருடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் திருமணமாகி திருப்பூரில் தனித்தனியே குடும்பமாக வசித்து வருகின்றனர். வசந்தாவிற்கு உடல் ரீதியாக பிரச்சனை உள்ளதால் தினந்தோறும் மாத்திரை உட்கொண்டு வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்ப்பப்பை கோளாறு காரணமாக மருத்துவரை அணுகியுள்ளனர். வீட்டிலேயே இருந்து மாத்திரையை உட்கொள்ளுமாறு அறிவுரை கூறியுள்ளார். கணவன் மனைவி இருவருமே கடந்த வாரம் வசந்தா அவரின் அம்மா செல்லம்மாளிடம் (75) தங்களுக்கு வாழப் பிடிக்கவில்லை என்று கூறியுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் யாருக்கும் தொல்லையாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் விஷம் அருந்தி தற்கொலையில் ஈடுபட்டனர். இன்று காலை அக்கம் பக்கத்தினர் கதவு பூட்டி இருந்ததை பார்த்து சென்ற பொழுது இருவரும் இறந்த நிலையில் இருந்துள்ளனர். 


மேலும் படிக்க | பரந்தூர் விமான நிலையம்; வேலை வாய்ப்பு, இழப்பீடு வழங்கப்படும் - அமைச்சர் எ.வ.வேலு


உடனடியாக பெருமாநல்லூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து இருவரின் உடலையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பெருமாநல்லூர் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. யாருக்கும் தொந்தரவாக இருக்கக் கூடாது என்று எண்ணத்தில் கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | ஊடகங்களில் சொல்லப்பட்ட செய்தி தவறானது -அமைச்சர் மூர்த்தி விளக்கம்


மேலும் படிக்க | அரசு விழாக்கள் பொழுதுபோக்கு அல்ல - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு


மேலும் படிக்க | வானிலை எச்சரிக்கை: தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும் நாளையும் கனமழை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ