தமிழக சட்டப் பேரவைச் செயலாளராக இருந்து வரும் பூபதி பிப்ரவரி மாதம் 28ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார். அவருக்கு சபாநாயகர் தனபால் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அதையடுத்து, பேரவைத் தலைவரின் தனிச் செயலாளராக இருந்து வரும் கே.சீனிவாசன், பேரவையின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


தற்காலிகமாக துணை செயலாளர் அனி ஜோசப்பை பொறுப்பு அதிகாரியாக தமிழக அரசு நியமித்திருந்தது. இந்த நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவைக்கு புதிய செயலாளராக சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்என்பது குறிபிடத்தக்கது.