சென்னை: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது 65-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். தனது பிறந்த நாளையொட்டி காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்துக்கு வந்த மு.க.ஸ்டாலின் அங்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்னர், அங்கிருந்து பெரியார் நினைவிடத்துக்கு மு.க.ஸ்டாலின் புறப்பட்டுச்சென்றார். காலை  8 மணியளவில் பெரியார் நினைவிடம் வந்த அவர், அங்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 


இதன் பிறகு, கோபாலபுரம் இல்லம் வரும் மு.க.ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதியிடமும், தாயார் தயாளு அம்மாளிடமும் ஆசி பெறுகிறார். அங்கிருந்து, தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்துக்கு அவர் வருகிறார்.


அங்குள்ள கலைஞர் அரங்கத்தில் தொண்டர்களிடம் மு.க.ஸ்டாலின் வாழ்த்து பெறுகிறார். 


கட்சியின் செயல் தலைவராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் முதன்முறையாக தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.