தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய தெற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இதன் காரணமாக வரும் 13 ஆம் தேதி தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், அந்த மையம் கூறியுள்ளது.


வரும் 14 மற்றும் 15 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிட கூடிய அளவில் மழை ஏதும் பதிவாகவில்லை என்றும் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.