சென்னை உள்ளிட்ட வடகிழக்கு கடலோர மாவட்டங்களை மிரட்டிய, காற்றழுத்த தாழ்வு நிலை இன்று தமிழக எல்லையை கடந்து விட்டது. எனவே, தமிழகம் கனமழையிலிருந்து சிறிது ஓய்வு பெற்றது. தமிழகத்தில், அக்., 29 முதல், நவ., 4 வரை தொடர் கனமழையால், நீர்நிலைகளின் நீர்மட்டம் ஓரளவு உயர்ந்துள்ளது. சென்னை உள்ளிட்ட வடகிழக்கு மாவட்டங்களில், வெள்ளப்பெருக்குகல் குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தது. 

 

இன்று காற்றழுத்த தாழ்வு நிலையானது தமிழக கடற்பகுதியை கடந்து, ஆந்திரா, ஒடிசா இடையே நகர்ந்து விட்டது. எனவே, சென்னைக்கு மலையில் இருந்து சிறிய ஓய்வு கிடைத்துள்ளது. 

 

சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன், நேற்று கூறுகையில், ''மத்திய மேற்கு வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, ஆந்திரா மற்றும் ஒடிசா அருகே நகர்ந்து விட்டது. அதனால், தமிழகத்திற்கு மழை பாதிப்பு இருக்காது. தமிழகம், புதுச்சேரியில், சில இடங்களில் மிதமான மழைக்கு மட்டும் வாய்ப்புள்ளது,'' என்றார். மேலும், 'ஆந்திரா கடல் பகுதி மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுங்கள்' எனவும் கூறினர். சென்னை, கடலுார், நாகை, துாத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களில், முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.