சென்னை: தமிழக சட்டப்பேரவையின் இரண்டாவது அமர்வு வரும் மார்ச் மாதம் 9 ஆம் தேதி மீண்டும் கூடும் என்று தலைமைச்செயலகம் செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்தக் கூட்டத்தை வரும் மார்ச் 9 ஆம் தேதி (திங்கக்கிழமை) காலை 10 மணிக்கு சட்டமன்ற கூட்டம் நடைபெரும் எனக் கூறப்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேபோல் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு சார்பாக அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2020-20 ஆம் ஆண்டுக்காக வரவு-செலவு திட்டத்தின் மீது பிப்ரவரி 20 ஆம் தேதி வரை விவாதம் நடந்து முடிந்தது. மேலும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. 


தற்போது மீண்டும் தமிழக சட்டப்பேரவையின் இரண்டாவது அமர்வு வரும் மார்ச் மாதம் 9 ஆம் தேதி மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் அரசுத் துறைகளுக்கு வழங்குவதற்கான மானியம் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது.