கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. போதுமான தடுப்பூசிகள் இல்லாத நிலையில் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இன்று 3.65 லட்சம் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வரும் என்று தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநர் டி எஸ் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 1 கோடியே 1 லட்சத்து 63 ஆயிரத்து 960 கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் வந்து உள்ளன.


தடுப்பூசி பற்றாக்குறையை எதிர்கொள்ளும் விதத்தில் தமிழக அரசு கொள்முதல் நடைமுறைகளை மேற்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் நேற்று காலை ஐதராபாத்தில் இருந்து சரக்கு விமானத்தில் 85 ஆயிரம் ‘கோவேக்சின்’தடுப்பூசிகள் சென்னைக்கு வந்தன. 


Also Read | Tasmac Shops: விலை உயர்வுடன் திறக்கப்படுகின்றதா டாஸ்மாக்? இன்று முக்கிய அறிவிப்பு


அதைதொடர்ந்து மத்திய தொகுப்பில் இருந்து நேற்று மதியம் புனேவில் இருந்து 14 ஆயிரத்து 420 தடுப்பூசிகள் சென்னை வந்தன. இவை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டன.  


தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தயக்கம் இருக்கிறது. அதுதொடர்பான பல கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பாலூட்டும் தாய்மார்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று  நிபுணர்கள் விளக்கம் தெரிவித்துள்ளனர். 


தமிழ்நாட்டில் இதுவரை 24,60,85,649 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 32,74,672 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


Also Read | தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, இன்று முக்கிய அறிவிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR