தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை இப்போது வலுப்பெற்று புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது. அது புயலாக மாறி சென்னை மற்றும் ஆந்திரா இடையே கரையை வரும் 4ஆம் தேதி கரையை கடக்க உள்ளது. அதாவது, இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் மேற்கு-வடமேற்கு (west-northwestwards) திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் (Southeast Bay of Bengal ) பகுதிகளில் 03-12-2023 வாக்கில் புயலாக (Cyclonic Storm) வலுப்பெற இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சென்னையை தாக்கப்போகும் புயல் - 4 ஆம்தேதி கரையை கடக்கிறது


அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து (northwestwards ) 04-12-2023 அதிகாலை வாக்கில் வடதமிழகம் (North Tamil Nadu)- தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் (South Andhra Pradesh coasts நிலவக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் இன்று அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது



மிக்ஜாம் புயலாக மாறும் என கூறப்பட்டிருக்கும் டிசம்பர் 3 ஆம் தேதி இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது தமிழகத்தின் ஒரு சில டெல்டா மாவட்டங்களும்,  வட மாவட்டங்களும் அதிக பாதிப்பை எதிர்கொள்ளும் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது  திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழகத்தின் பகுதிகள் புயல் பாதிப்பை எதிர்கொள்ளும்.


இதனையொட்டி தமிழக அரசு மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படை உள்ளிட்டவை தயார் நிலையில் இருக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. 


மேலும் படிக்க | குமரியில் பர்த்டே பார்ட்டிக்கு சென்ற மாணவி! சிதைத்த வாலிபர்கள்! வீடியோ வெளியிட்டு மிரட்டல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ