தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் நாளை காலை 11 மணிக்குக் கூடுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த கூடத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெற உள்ளது. 


தமிழகம் முழுவதும் வறட்சி தாண்டவமாடுகிறது. குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. துறை ரீதியாக பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.


இந்நிலையில் நாளை நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நீட் தேர்வு சட்ட மசோதாபற்றியும் ஆலோசிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.