தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 8.6.2020 அன்று தலைமைச் செயலகத்தில், உள் (போக்குவரத்து) துறை சார்பில் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், சித்திரைப்பட்டி கிராமத்தில் 1 கோடியே 53 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனாவை தடுக்க தமிழகம் வரும் மத்திய அரசின் நிபுணர் குழு...


பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கேற்ப போக்குவரத்துத் துறை அலுவலக செயலாக்கப் பணிகளை சிறப்பாகவும், துரிதமாகவும் நிறைவேற்றிடவும், பொதுமக்கள் சிரமமின்றி போக்குவரத்துத் துறை தொடர்பான அன்றாடப் பணிகளை அருகிலேயே உள்ள அலுவலகங்களில் மேற்கொள்ள ஏதுவாகவும், புதிய பகுதி அலுவலகங்களைத் தோற்றுவித்தல், பகுதி அலுவலகத்தினை வட்டாரப் போக்குவரத்து அலுவலகமாகத் தரம் உயர்த்துதல், தேவையான வசதிகளுடன் புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகக் கட்டடங்கள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.


அந்த வகையில், 2018-2019ஆம் ஆண்டிற்கான உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் இயக்கூர்திகள் சட்டங்கள் மற்றும் நிருவாக மானியக் கோரிக்கையில், வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதி அலுவலகத்திற்கு சொந்தக் கட்டடம் கட்டப்படும் என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ், இயங்கி வரும் பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகத்திற்கு, 1.72 ஏக்கர் நிலப்பரப்பில், 5,083 சதுர அடி கட்டட பரப்பளவில் 1 கோடியே 53 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார். 


கொரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸ் சேவை பெற தொலைபேசி எண்கள் அறிவிப்பு...!


இதன்மூலம், பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் ஆகிய வட்டங்களில் உள்ள 846 கிராமங்களை சேர்ந்த சுமார் 3.4 லட்சம் மக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் தொடர்பான பணிகளை சிரமமின்றி பெற்றுப் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், போக்குவரத்துத் துறை அமைச்சர் MR  விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க. சண்முகம், இ.ஆ.ப., உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர், இ.ஆ.ப., போக்குவரத்துத் துறை ஆணையர் / முதன்மைச் செயலாளர் தென்காசி சு. ஜவஹர், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.