ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தன்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுவிக்க தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், தமிழக அமைச்சர்கள் பங்கேற்றனர்.


இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் தெரிவிக்கையில்...



ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தன்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுவிக்க தமிழக ஆளுநருக்கு இன்றே பரிந்துரை செய்யப்படும்.


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் MGR பெயரை சூட்ட மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.



முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கவும் பரிந்துரை செய்யப்படும்


என குறிப்பிட்டுள்ளார்!