தமிழகம் முழுவதும் வரும் 19ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒவ்வொரு ஆண்டும் போலியோ சொட்டு மருந்தானது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான போலியோ சொட்டு மருந்து முகாம் வருகிற19ஆம்  தேதி நடைபெற உள்ளது.  சென்னையில் மட்டும், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், மாநகராட்சி பள்ளிகள், பேருந்து நிலையங்கள் என ஆயிரத்து 654 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


இதனால் ஏழு லட்சம் குழந்தைகள் பயனடைவார்கள் என சென்னை பெருநகர மாநகராட்சி  தெரிவித்துள்ளது. மேலும் வீடு, வீடாக சென்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்டதா என ஆய்வு நடத்தவும் மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.


இந்நிலையில் தற்போது தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது என்னும் தகவல் வெளியாகியுள்ளது.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.