2017-ம் ஆண்டுக்கான தமிழ் பேரறிஞர்களுக்கான தமிழக அரசின் விருதுகள் யாருக்கு வழங்கபடுகிறது என்பது குறித்து அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழா வரும் 16-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. விருது பெற்ற அனைவருக்கும் காசோலை தங்கப்பதக்கம் மற்றும் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் கூறப்படுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


விருது பெறும் நபர்கள் விவரம் பின்வருமாறு:- 


திருவள்ளுவர் விருது : முனைவர் பெரியண்ணன் 


தந்தை பெரியார் விருது : பா.வளர்மதி


அண்ணல் அம்பேத்கர் விருது : சகோ.ஜார்ஜ்


மகாகவி பாரதியார் விருது: முனைவர் சு.பாலசுப்ரமணியன்


பாவேந்தர் பாரதிதாசன் விருது : கே. ஜீவபாரதி


அறிஞர் அண்ணா விருது : அ. சுப்ரமணியன்


காமராசர் விருது : தா.ரா.தினகரன்


தமிழ்த்தென்றல் திருவிக விருது : எழுத்தாளர் வை.பாலகுமாரன்


தமிழ்க் காவலர் விசுவநாதம் விருது: முனைவர் ப.மருதநாயகம்.