தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகம், புதுவையில் அடுத்த இரு தினங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


குமரி கடல் பகுதியில் இருந்து கர்நாடகா வரை காற்றழுத்த தாழ்வு நிலையானது வளிமண்டல கீழடுக்கில் நிலவி வருவதால் தமிழகம், புதுவையில் அடுத்த இரு தினங்களில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை மாநகரை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வனிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக 
31 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் 23 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாக கூடும் தெரிவிக்கப்பட்டுள்ளது.