திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பிரதமர் மோடிக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்தி வருகிறார் விவசாயி.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள எரகுடி கிராமம் உள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 50) விவசாயியான இவருக்கு திருமணமாகி பானுமதி (40) என்ற மனைவியும் தீபா என்ற மகளும், சதீஷ்குமார், சூர்யா ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.


சங்கர் ஆரம்ப காலத்திலிருந்தே பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ரசிகராவார். அவர் தனது சொந்த செலவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோவில் கட்டி சிலை வைத்து வழிபட்டு வருகிறார்.


இந்த நிலையில் துறையூரை அடுத்த எரகுடியில் உள்ள தனது விவசாய தோட்டத்தில் சங்கர் பிரதமர் மோடிக்கு கோவில் கட்டி சிலை அமைத்துள்ளார். தினமும் அவரது சிலைக்கு அபிஷேகம் செய்து, தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தி வருகிறார்.


இது குறித்து சங்கர் கூறியதாவது:-


விவசாயத்தில் கிடைத்த ஓரளவு பணத்தை கொண்டு, கோவில் கட்டும் பணியை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தொடங்கினேன். தற்போது, கோவில் கட்டி முடித்துவிட்டேன். கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பதே எனது லட்சியம். கட்சியையும் தாண்டி பிரதமர் மோடி ஒரு நல்ல மனிதர் ஆவார். அவர் கொள்கையால் ஈர்க்கப்பட்டு இந்த கோவிலை கட்டி உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.