ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்கள் நீக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு இன்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆர்.கே.நகரில் சுமார் 5,117 போலி வாக்காளர்களை நீக்க உத்தரவிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் திமுக.,வின் ஆர்.எஸ்.பாரதி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 


இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒருமுறைக்கு மேல் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலி வாக்காளர்களை சேர்த்த அரசியல் கட்சி பிரமுகர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதுடன், அரசியல் கட்சி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தேர்தல் கமிஷனை ஐகோர்ட் அறிவுறுத்தி உள்ளது.